அரியலூர், ஆக. 6 - மின்சாரம் தாக்கி உயிரிழந்த கேங்மேன் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார். இவர் உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத் தில் ஏறி மின் பழுது நீக்கிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் கூறாய்வுக் காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்படா மல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் யாரும் வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தொடர்ந்து ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கேங்மேன்கள், சிஐ டியு சங்கத்தினருடன் இணைந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ வன் முன்னிலை வகித்தார். இதில், கேங்மேன் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், பணப் பயன் உள்ளிட்டவற்றை மூன்று மாதத்திற் குள் வழங்க வேண்டும். கேங்மேனுக்கு என்ன பணி வழங்கப்படுகிறதோ அந்தப் பணியை மட்டுமே அவர்களுக்கு வழங்க வேண்டும். கேங்மேன்களை, மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தனியாக பணிக்கு அனுப்பக் கூடாது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத அதிகாரிகளே விபத்துக்கு காரணம். எனவே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர்.