அறந்தாங்கி, ஜூலை 8 - மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தரக்கோரி, மாட்டு வண்டியுடன் புதுக் கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர் கூத்தபெருமாள் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் துவக்கி வைத்துப் பேசி னர். மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியன், விதொச ஒன்றியத் தலைவர் வீரையா, சிஐடியு மாணிக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழி லாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு ஆவுடையார்கோவில் வட்டத்தில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் உத்தரவாதம் அளித்த இடத்தில், குவாரி அமைத்து கொடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மாட்டுவண்டி மணல் குவாரியை உடனே அமைக்க அதிகாரி களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.