அரியலூர் , ஜன.8- அரசு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து நடவ டிக்கையிலும் தலையிடும் தொமுச நிர்வாகியை கண்டித்து சிஐடியு அரசு போக்குவரத்துக்கழக ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் பணி மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்கு வரத்து கழக பணிமனை நுழைவு வாயிலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் வி.சுப்பிர மணியன் தலைமை வகித் தார். சிஐடியு மத்திய சங்க துணைத்தலைவர் நீலமே கம், பொருளாளர் வி.வீரப் பன் ஆகியோர் பேசினர். தொழிலாளர் சட்டம் மற்றும் ஒப்பந்த விதிமுறை களை கடைப்பிடிக்காமல் ஜெயங்கொண்டம் பணி மனை நிர்வாகம் செயல்படு வது கண்டிக்கத்தக்கது. ஒப்பந்த விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். நிரந்தர பணி யாளருக்கு பணி வழங்கு வதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.