districts

img

சிஐடியு ஆட்டோ நிலைய புதிய கிளை துவக்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.12- திருச்சி திருவெறும்பூர் புதிய நகர  பேருந்து நிறுத்தத்தில் சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் சங்கத்தின் புதிய ஆட்டோ நிலைய துவக்க விழா திங்களன்று நடை பெற்றது.  விழாவிற்கு ஆட்டோ நிலைய தலை வர் சுடர்மணி தலைமை வகித்தார். சங்க  பெயர் பலகையை வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின் திறந்து வைத்தார். ஆட்டோ சங்க திருச்சி மாவட்ட பொதுச்  செயலாளர் மணிகண்டன் சங்க கொடியை ஏற்றினார். மாவட்டத் தலைவர் சார்லஸ், சிபிஎம் பகுதி செயலாளர் மணிமாறன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். பொருளாளர் முகமது அப்துல் ரஹீம் நன்றி கூறினார். விழாவில் ஆட்டோ சங்க பகுதிதலை வர் சற்குணம், பகுதி பொருளாளர் முரு கன், வாலிபர் சங்க பகுதி செயலாளர் சந்தோஷ், சிபிஎம் ஜாகிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.