districts

img

தாராசுரத்தில் சிஐடியு ஆட்டோ நிலையம் துவக்கம்

கும்பகோணம், ஜூன் 21- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில் அருகில் பொதுமக்கள் வசதிக்காக, (சிஐடியு) ஐராதீஸ்வரர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் புதிய ஆட்டோ நிலையம் துவங்கப்பட்டது. ஆட்டோ நிலைய துவக்க விழாவிற்கு, சங்கத் தலைவர் வி.பி.சாமி தலைமை வகித் தார். சங்கச் செயலாளர் மணிகண்டன், பொரு ளாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி நெசவாளர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் கே.ஆர்.சந்திரன், சங்கப் பெயர் பலகை திறந்து வைத்தார். விழாவில், சாலை போக்குவரத்து மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, மாமன்ற  உறுப்பினர் ஏ.செல்வம், ஆட்டோ சங்கம் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், செய லாளர் சங்கர், நகர் செயலாளர் கார்த்திகே யன், நகரப் பொருளாளர் மகாராஜா, ஆட்டோ  சங்க கௌரவத் தலைவர் கே.செந்தில் குமார், எவர்சில்வர் தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.பி.மணி உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.