districts

img

சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு

அரியலூர், செப்.21 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் நான்கு ரோடு, ராஜேந்திர சோழன்  ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையா ளர்களின் நலச் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி  நடைபெற்றது.  ஆட்டோ சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு சங்க செய லாளர் சரவணன், துணைத் தலைவர் ரமேஷ்,  துணைச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவரும், மூத்த  நிர்வாகியுமான சிற்றம்பலம் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். சிஐடியு  சங்க கொடியை மாவட்ட பொருளாளர் கண்ணன் ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்டத்  தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலா ளர் பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.