கும்பகோணம், ஆக.26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொட்டையூரில் சிஐடியு ஆதிவிநாய கர் ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர்ப் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெயர்ப் பலகையை அப்பகுதியின் கும்ப கோணம் மாமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி திறந்து வைத்தார். சங்க கொடியை, சங்கத் தின் கௌரவத் தலைவர் செந்தில்குமார் ஏற்றி வைத்தார். திறப்பு விழாவை வாழ்த்தி மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், சாலை போக்குவரத்து மாநிலப் பொரு ளாளர் பார்த்தசாரதி, நகரத் தலைவர் சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் சசி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சங்கர், கார்த்தி, மேல காவேரி பாலச்சந்தர் ஆகியோர் பேசினர்.