திருச்சிராப்பள்ளி, மே 30 - சிஐடியு 53வது அமைப்பு தின நிகழ்ச்சி திருச்சி காந்தி மார்கெட்டில் இரவு நேர மந்தை சுமைப்பணி தொழிலா ளர் சங்கம் சார்பில் திங்களன்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர், ரெங்கராஜன் சங்க கொடியேற்றி அமைப்பு தின சிறப்புகளை விளக்கி பேசினார். சங்க பெயர் பலகையை சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். மலைக்கோட்டை பகுதி சிபிஎம் செயலாளர் ராமர், சுமைப்பணி சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
சிஐடியு அமைப்பு தின கூட்டம் மற்றும் சண்டிகர் அகில இந்திய நிர்வாக கமிட்டி முடிவுகள் விளக்க பேரவை திங்க ளன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். சண்டிகர் அகில இந்திய நிர்வாக கமிட்டி முடிவுகள் குறித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு பேசினார். மாவட்ட குழு முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். கூட்டத்தில் மோடி அரசின் தனியார்மய, தாராள மய கொள்கைக்கு எதிராகவும், உழைப் பாளி மக்களை பிளவுபடுத்தி, மத வெறி கலவரங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்கு எதிராக தொழி லாளர்கள், விவசாயிகள், வர்க்க படையை அணிதிரட்ட சிஐடியு அமைதி அமைப்பு தினத்தில் உறுதிமொழி எடுக்கப் பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு 53 ஆவது அமைப்பு தின பேரவைக் கூட்டம் மற்றும் கொடி யேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் பி.கருப்பையன் சிஐடியு கொடியை ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் மாநிலக் குழு, மாவட்டக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். கட்டுமான சங்க மாவட்டச் செயலா ளர் இ.டி.எஸ்.மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அன்பு, எஸ். செங்குட்டுவன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன், மாவட்டத் தலைவர் க.மதியழகன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன், விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், முறைசாரா சங்க மாவட்ட துணைச் செயலாளர் செல்வேந் திரன், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், சிஐடியு செய்தி மாத இதழுக்கு 348 ஆண்டு சந்தா வழங்கப்பட்டது.