மயிலாடுதுறை, டிச.28 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆலய உபதேசியார் ஆர்.வில்சன் தலைமை வகித்தார். திருவிளையாட்டம் குருசேகரத்தின் செயலர் கில்பர்ட் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று சிறுவர்களுக்கு பரிசு களை வழங்கினார். மதங்களை கடந்து நடந்த இவ்விழாவில் பூதனூர், திருவிளை யாட்டம் கிராமங்களைச் சேர்ந்த ஏராள மான சிறுவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த வில்லுப்பாட்டு, நாடகம், சிறப்பு பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சி களை செய்து காட்டினர். சபை சங்க நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.