districts

சோழம்பேட்டை - மூவலூர் இணைப்பு பாலப் பணிகள் ஜூன் மாதத்தில் முடிக்கப்படும் சிபிஎம் போராட்டம்: அதிகாரிகள் உறுதி

மயிலாடுதுறை, மார்ச் 9 - மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை - மூவலூர் இணைப்பு பாலத்தின் கட்டு மான பணிகள் தொடங்கி மூன்று ஆண்டுகள்  ஆகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாப்படுகை அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலா ளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலா ளர் துரைக்கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மேகநாதன், ரவீந்திரன், அறிவழகன், இயற்கை விவசாயி ராம லிங்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர்.  15-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவைக்காக கட்டப்படும் சோழம்பேட்டை- மூவலூர் இணைப்பு காவிரி பாலத்தை உடனே கட்ட வலியுறுத்தியும், அதுவரை  அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்துத்  தர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி னர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகா ரிகள் ஜூன் மாதத்திற்குள் பாலத்தின் பணிகளை முடிப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.