கும்பகோணம்,பிப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டி யனின் தாயார் சிந்தாமணி அம்மையார் அண்மையில் காலமானார். அவரது உருவப் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லமான புளியம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவா சன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, சா.ஜீவபாரதி ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிந்தாமணி அம்மை யாரின் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி னார். இந்நிகழ்ச்சியில் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ரா.முருகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், வி.சி.க மண்டல பொறுப்பாளர் சா விவேகானந்தன் குடந்தை புறநகர் மாவட்ட செயலாளர் முல்லைவளவன், தீண்டா மை ஒழிப்பு முன்னணி பொ றுப்பாளர் பேராசிரியர் அரங்க. சுப்பையா, நீலப்புலி கள் இயக்க தலைவர் வழக்க றிஞர் இளங்கோவன், குடி யரசு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். குடந்தை ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராதா நன்றி கூறினார்.