புதுக்கோட்டை, நவ.14 - சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடை பயணத்தினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார். நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் செவ்வாய்க்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடை பெற்ற நடைபயணத்தினை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.