குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
பாபநாசம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அலு வலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பேரூ ராட்சி அளவிலான குழந் தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி தலைமை வைத்தார். செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணைத் தலை வர் பூபதி ராஜா முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக் குழந்தைகள் பாது காப்பு அலகின் மேற்பார் வையாளர் அஜிதா, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலா ளர்கள், கொத்தடிமை குழந்தை தொழிலா ளர்கள், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் கவுன்சிலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் பரம சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், நவ.12 - உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தலின் அடிப்ப டையில், தஞ்சாவூர் மாவட் டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியா வசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்ப மில்லை எனில் உரிமத் தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறையின் வலை தளத்தின் (www.tnpds. gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொரு ளில்லா குடும்ப அட்டை யாக மாற்றிக் கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
கரூர், நவ.12 - டாக்டர் அம்பேத்கரின் பெயரில் மக்களின் முன் னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படு கிறது. பட்டியலின சமுதா யத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க லாம். 2024 ஆம் ஆண்டிற் கான விருது, 2025 ஆம் நிதியாண்டில் திருவள்ளு வர் திருநாளில் தேர்ந்தெ டுக்கப்படும் நபருக்கு ரூ. 5,80,000 விருதுத் தொகை வழங்கப்பட உள்ளது. டாக்டர் அம்பேத் கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை கரூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் நவ.22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.
ஆன்-லைன் அபராதம் விதிப்பதை நிறுத்த ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை
அரியலூர், நவ.12 - ஆட்டோ தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்டக் குழு கூட்டம் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நவ.28 ஆம் தேதி மாநிலச் செயலாளர் கலந்து கொள்ளும் பேரணி - பொதுக்கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொள்வது, ரயில்வே தேர்தலில் நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஆட்டோ சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆட்டோக்களுக்கு ஆன்-லைன் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். மாநில ஆட்டோ செயலியை அமல்படுத்த வேண்டும். குருவாலப்பர் கோவில் முன்பு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும். 20 ஆண்டுகளாக மீன்சுருட்டி - கல்லாத்தூர் சாலையில் உள்ள சீர்கேடுகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டியதாக புகார்
ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் மனு தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள் கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, மாண வர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய தலைமை ஆசி ரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அய்யம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி யில், அதே பகுதியை சேர்ந்த கனிஷ் வர்மா, நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புனிதா, ஒரு மாணவி உட்பட ஐந்து மாண வர்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாக கூறப்படுகிறது. மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை மொபைலில் போட்டோ எடுத்தவர்கள், இதனால் மாணவர்களின் பெற்றோர் மொபைலுக்கு இந்த போட்டோக்களை அண்மையில் அனுப்பி உள்ளனர். கடந்த அக்.21 அன்று நடந்த இந்த சம்பவம் தற்போது வெளி யில் தெரிய வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற் றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்ட தற்கு, உரிய பதில் அளிக்க வில்லை எனவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இப்புகார் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் கூறு கையில், கடந்த அக்.21 அன்று நடைபெற்ற இந்த சம்பவம், ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாண வரை வகுப்பறையை பார்த்து கொள்ளக் கூறி யுள்ளார்கள். அந்த மாண வர்தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளார். ஆசிரியர்கள் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவல ருக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை புனிதா கூறுகையில், “கடந்த அக்.21 அன்று வகுப்பில் மற்றொரு ஆசிரியை வராததால், மாணவர்களே வகுப்பறையை கவனித்துக் கொண்டுள்ளனர். அப்போது, யாரிடமும் பேசக் கூடாது என்பதற்காக மாண வர்களே விளையாட்டாக வாயில் செல்லோ டேப்பை ஒட்டியுள்ளனர். பிறகு, நான் அந்த வகுப்புக்கு சென்ற போது, ஒரு மாணவர் மட்டும் வாயில் டேப் ஒட்டியிருந் தார். நான் அதை அகற்றச் சொல்லி விட்டேன். மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டி ருந்ததை சிலர் போட்டோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. என்னிடமும், மாணவர்களி டமும் கல்வி அலுவலர் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்” என்றார்.
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் செயற்கை உறுப்புகள் வழங்க இன்று சிறப்பு அளவீடு முகாம்
தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு கை, கால் செயற்கை உறுப்புகள் வழங்கும் திட்டத்திற் கான மதிப்பீடு முகாம் நவ.13 (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது என பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித் துள்ளார். தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி விபத்து மற்றும் வேறு காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கான சிறப்பு அளவீடு முகாம் நவ.13 (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே கை, கால் செயற்கை அவயங்கள் தேவைப் படுவோர், மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து நேரில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார்.
நவ.14 முன்னாள் படை வீரர்களுக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம்
பெரம்பலூர், நவ.12 - முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர் முகாம் நடைபெற வுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பர்ஸ் (SPARSH) மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA) அலுவலகத்தின் சார்பாக ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமையில் நடைபெறு கிறது. இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உயிர்ச்சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறி யோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறை பாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஒரு தகுதி ஒரு பென்சன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்க ளின் ஆதார் விபரங்களை ஸ்பர்சில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் 14.11.2024 (வியாழன்) அன்று நடைபெறும். முகாமில் பெரம்ப லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலந்து கொள்ள விருப்ப முள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் தங்களது படைப்பணிச் சான்று, ஓய்வூதிய கொடுப் பாணை, அடையாள அட்டை, பான்கார்டு மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் சென்று இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
கொடமங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கும்பகோணம், நவ.12- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடமங்கலம் கிரா மத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க புதிய கிளை துவங்கப்பட்டது. விவசாயிகள் சங்க துவக்க நிகழ்ச்சியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கொடமங்கலம் விவசாயிகள் சங்க புதிய கிளைக்கு தலைவராக ரா.மகேஸ்வரன், செய லாளராக அ.வேலுமணி, பொருளாளராக கோ. ராமகிருஷ்ணன் உட்பட 14 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். அமைப்பு கூட்டத்தில் கொடமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு கிராம விவசாயிகள் பயன்ப டும் வகையில் நிரந்தர அரசு நெல் கொள்முதல் நிலை யம் அமைக்க வேண்டும். கொடமங்கலம் கிராம மெயின் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் சிரம மின்றி மயானத்திற்கு சட லத்தை எடுத்துச் செல்வ தற்கு சாலை, மின்விளக்கு, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சட்ட உதவி, ஆலோசனை பெற 15100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
அரியலூர், நவ.12 - தேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 39ஏ, பொதுமக்களுக்கான சட்ட உதவியையும், அனைவருக்குமான நீதியையும் உறுதி செய்கிறது. பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கிடும் நோக்கில் சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் 1987-இல் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நாடெங்கும் சட்டப் பணிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டங்களின் படி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மக்கள் நீதிமன்றங்களை நிறுவியும், பல்வேறு தனித் திட்டங்களை வகுத்தும் பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை அளித்து வருகிறது. பொதுமக்கள் சொத்து பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்ப உறவுகளிடையே எழும் பிரச்சனை, விபத்து மற்றும் வாகன காப்பீட்டு வழக்குகள், தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகள் மற்றும் வங்கிக் கடன் சார்ந்த வழக்குகள் என பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அணுகி சுமூகமான தீர்வை பெறலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற்றிட 15100 என்ற இலவச தொலைபேசி எண்ணில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினை தொடர்பு கொள்ளலாம்” என்றார். இதேபோல் மணக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்த நூறுநாள் திட்டப் பணியாளர்களிடமும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாதுகாப்புப் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவ இளை ஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. தமிழக மீனவர்களின் வாரிசுகள் கடலோர காவல் படை, கடற்படை உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு பணிகளில் சேர்வதற்கு 90 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பை தமிழக கட லோர பாதுகாப்புக் குழுமம் நடத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் பயின்று தேர்வில் மொத்த பாடங்களில் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு, தமிழக அரசால் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் கடற்படை, ராணுவம், மத்திய கடலோர காவல் படை மற்றும் விமா னப்படையில் சேர்வதற்கு உதவி செய்யப்ப டும். 3 மாத பயிற்சி காலத்தில் தங்கும் இடம், உணவு இலவசமாகவும் மாதம் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அதிராம்பட்டி னம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தை அணுகி இந்த அரிய வாய்ப்பை, படித்த மீனவ சமுதாய இளை ஞர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமரங்கோட்டை கிராமத்தில் மின்னணு பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி
தஞ்சாவூர், நவ.12 - தமிழ்நாட்டில் கிராம அளவில் பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் முறை கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. விவசாயிகள் அரசின் நலத்திட்ட பலன் களை பெறுவதற்கும், பல்வேறு நிறுவனங்க ளில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடமை தொடர்பான விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு முறையும் விவசா யிகள் தனித்தனியே வழங்கிட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக அனைத்து நில விவ ரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து, அவ்வப்போது புதுப்பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந்திட ஏது வாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25 ஆம் ஆண்டு ரபி பரு வத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தாமரங்கோட்டை வடக்கு கிரா மத்தில், மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீட்டினை மேற்கொள்ள வேளா ண்மை துறையினரால் திட்டமிடப்பட்டது. இக்கணக்கீட்டு பணிக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, விதைச்சான்று துறை சார்ந்த அலுவலர்களோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மை அறி வியல் கல்லூரி மாணவர்கள், முனைவர் செந்தாரகை தலைமையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களை வரவேற்று, மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியின் முக்கியத்துவம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாலதி பயிற்சியுடன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து வேளாண்மை உதவி அலுவ லர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள், விதை அறு வடை பரிசோதகர்கள், அனைத்து மாணவர் களுக்கும் அவர்களது செல்போனில் இதற்கான பிரத்யேக செயலியினை பதிவேற்றம் செய்தும், குழுவாக பிரிந்து மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியினை மேற்கொண்டனர். தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் மொத்தம் 4,649 உட்பிரிவுகளில் கணக்கெ டுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், ரபி பருவ பயிர்கள், காய்கறி பயிர்கள், தென்னை சாகுபடி பரப்பு மற்றும் பிற பயிர் சாகுபடி கணக்கீடு பணி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மூலம் களஆய்வு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தாம ரங்கோட்டை வடக்கு கிராமத்தில் முதற்கட்ட மாக மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என வேளா ண்மை உதவி இயக்குநர் (பொ) சன்மதி தெரி வித்துள்ளார்.