திருச்சிராப்பள்ளி, பிப்.18- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட் பட்ட பஞ்சப்பூரில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் ரூ403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய் அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பஞ்சப்பூரில் நடை பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், பழனியாண்டி ஆகியோர் பங்கேற்று டைடல் பூங்கா அமையவுள்ள இடத்தினை பார்வை யிட்டனர்.