புதுக்கோட்டை, ஆக.29- புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசலை அடுத்த கீழக்குறிச்சி கிரா மத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக் கிழமை தொடங்கி வைத்தார். அன்னவாசல் ஒன்றி யக்குழுத் தலைவர் வி.ராமசாமி, துணைத் தலை வர் கல்யாணி விஆர்எஸ் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபிராம சுந்தரி,வெங்கட் பிரபு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கை.பழனிச் சாமி, ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிமீனாள் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமா னோர் தங்கள் கோரிக்கை களை மனுக்களாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து தீர்வுக்காக வருகை தந்திருந்தனர்.