கரூர், செப்.4 - மாநில அளவிலான கொங்கு சகோதயா கூட்ட மைப்புப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் பரணி வித்யா லயா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. அண்மையில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி யில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டியில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், 98 வகை யான பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் கரூர் பரணி வித்யா லயா பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 42 பேர் தங்கப் பதக்கமும், 15 பேர் வெள்ளிப் பதக்கமும், 18 பேர் வெண்கலப் பதக்க மும் வென்று, ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவி லும் சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் புள்ளிகளின் அடிப்படையில் மூன்றாவது முறையாக 75 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத் தையும் வென்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவ ரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வரு மான முனைவர் சி.ராம சுப்பிரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, ஒருங் கிணைப்பாளர்கள், ஜூடோ பயிற்சியாளர்கள், சாதனை படைத்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் ஆகி யோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரெங்கன், அறங் காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.