மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அனைவருக்கும் வீடு வாங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், பொறையார், எருக்கட்டாஞ்சேரி, சாத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 110 பயனாளிகளுக்கு தலா வீடு ஒன்று ரூ.2.10 லட்சம் செலவில் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பேசினார்.