மயிலாடுதுறை, ஜூலை 1 - மயிலாடுதுறையில் மின் வாரிய நிரந்தரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரிய செயற்பொறியாளர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்றனர். மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிடப் பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத் துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின் வாரியத்தை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.