மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக் கானலின் நகரின் மத்தியப்பகுதி யில் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக நட்சத்திர ஏரி அமைந்துள்ளது, கொடைக்கானலுக்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியை ரசிக்கமால், படகு சவாரி செய்யாமல் புகைப் படம் எடுக்காமல் சென்றதில்லை , இப்பேற்பட்ட சிறப்பு மிகுந்த இந்த நட்சத்திர ஏரி கொடைக்கானல் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மலைக்கிராம மக்களின் வாழ்வா தாரமாக திகழ்கின்றது, திண்டுக் கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் ஆங்கிலேயர்களால் 1845 ஆம் ஆண்டு மலை வாசஸ்தலமாக உருவாக்கப்பட்டதாகும். இங்கு உள்ள நட்சத்திர வடிவிலான ஏரி புகழ் பெற்றதாகும். சுமார் நான்கரை கிலோ மீட்டர் சுற்றள வும் 60 ஏக்கர் பரப்பளவும் கொண்ட நட்சத்திர ஏரியினை கடந்த 1863 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சர் வீர் ஹென்றி லெவின்ஜ் பரோனெட் என்பவர் உருவாக்க தொடங்கி சதுப்பு நிலத்தினை ஏரியாக கட்டமைத்து உள்ளார். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் பழனி நகரின் குடிநீராக இன்று வரை பயன்பட்டு வருவது குறிப் பிடத்தக்கதாகும், சர் வீர் ஹென்றி லெவின்ஜ் பரோனெட் 1819 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரை மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டராக பல வருடங்கள் பணி புரிந்துள்ளார், இவர் ஓய்வு எடுப்ப தற்காக கொடைக்கானல் பகுதிக்கு வந்து ஏரியினை உருவாக்கிய நிலையில் 1867 ஆம் ஆண்டு கொடைக்கானல் நகருக்கு வருகை புரிந்து நிரந்தரமாக பாம்பார்புரத்தில் உள்ள பாம்பார் இல்லம் என்ற வீட்டில் தங்கி அதனை தொடர்ந்து பல ஆண்டு கள் கொடைக்கானலில் இருந்த அவர் நட்சத்திர ஏரியினை ஆட்கள் உதவியுடன் உருவாக்கி இருப்ப தாக கூறப்படுகிறது. இதனை யடுத்து சென்னைக்கு சென்று 1885 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இறந்துள்ளார், இந்நிலையில் பல்வேறு தரப்பினருக்கு உதவி களை செய்து வந்துள்ள அவர் ஜென்டில்மேன் என்று அப்போதே பொதுமக்கள் எல்லோராலும் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான கல்வெட்டு குறிப்புகள் கொடைக் கானல் நகராட்சி அலுவலகம் எதிரே ஸ்தூபியாக அமைக்கப் பட்டுள்ளது, நூற்றாண்டுகள் கடந்தும் புதுமைப்பொலிவுடன் அந்த ஸ்தூபி இன்று வரை பரா மரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும். எனவே நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் வீர் ஹென்றி லெ வின்ஜ் பிறந்தநாளை அரசு விழா வாக கொண்டாட வேண்டும் என கொடைக்கானல் பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர், சிலை வைத்து மணிமண்டபம் அமைத்திடுக இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில். விவசாயி களின் துயரை கண்டு பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் போன்று பழனி நகரின் குடிநீர் தேவையுடன் செல்லும் வழியில் உள்ள பல்வேறு மலைக்கிராமப் பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக நட்சத்திர ஏரியினை உருவாக்கிய சர் வீர் ஹென்றி லெவின்ஜ்ஜின் பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அதே போல அவருக்கு சிலை வைக்கவும், மணி மண்டபம் கட்டவும் அவரின் புகைப்படங் களை வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வைக்க வும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நவம்பர் 29 அன்று நடைபெற்ற அவரது 205 வது பிறந்த நாளில் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார் வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுற்று லாப்பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, கடந்த 2019 ஆம் ஆண்டு சர் வீர் ஹென்றி லெவின்ஜ்ஜின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலை யில், தற்போது இயற்கை ஆர்வ லர்களால் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. -இலமு, திண்டுக்கல்