சிவகாசி, ஜன.24- சிவகாசி அருகே மீனம் பட்டியில் அரசு அனு மதியின்றி பிஜிலி வெடி வைத் திருந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆதீஸ்வரன் தலைமையி லான போலீசார் ரோந்து சென்றனர். மீனம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே சென்ற போது, அரசு அனுமதி மற்றும் உரி மம் இன்றி ரூ.3ஆயிரம் மதிப் பிலான பிஜிலி வெடியை சஞ்சய்(31) மற்றும் பால் ராஜ்(45) ஆகியோர் வைத்தி ருந்தார்களாம். இதையடுத்து வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.