districts

திருச்சி முக்கிய செய்திகள்

முதியோருக்கு  உணவு  வழங்கல்

அறந்தாங்கி, அக்.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அருகே குரும்பூரில் முதி யோர் காப்பகம் இயங்கி வருகிறது. தமிழக பிற்ப டுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் மெய்ய நாதன், தனது பிறந்த நாளை கொண்டாடும் வித மாக அறந்தாங்கி தெற்கு  ஒன்றிய திமுக சார்பில்  சுமார் 120 முதியோர் களுக்கு மதிய உணவு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு வந்து காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவை அமைச்சர் மெய்யநாதன் பரிமாறி னார். மதிய உணவு வழங்கிய அமைச்சருக்கு முதியோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பழச் செடிகள் தொகுப்பு: மானியத்தில் பெறலாம்

பாபநாசம், அக்.25 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டார  தோட்டக் கலை உதவி இயக்குநர் வினோதா வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், “அம்மாப் பேட்டை வட்டாரத்தில் தோட்டக் கலைத்துறை மூலம்  அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின்கீழ் பழச் செடிகள்  தொகுப்பு மானிய விலை யில் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் கொய்யா, பப்பாளி, எலு மிச்சை, சப்போட்டா, சீத்தா ஆகியவை அடங் கும். இத்தொகுப்பில் ரூ.150 அரசு மானியத் தொகை போக, பொது மக்கள் ரூ.50 செலுத்தி  பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன் பெற தோட்டக் கலைத் துறை, அம்மாப்பேட்டை வட்டாரத்தை அணுக லாம்” என கூறப்பட்டு உள்ளது.

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.25 - அண்ணாமலை பல்கலைக்கழ கத்திலி ருந்து மாற்றுப் பணி யில் அனுப்பப்பட்ட பேரா சிரியர்களை அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக, திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு வெள்ளியன்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளையின் தலைவர் ப.ரவீந்திரன் தலைமை வகித்தார், மண்டலப் பொருளாளர் பி.ராஜா ராமன் போராட்டத்தை விளக்கிப் பேசினார். மண்டலத் துணைத் தலை வர் அ.முருகானந்தம், கிளைச் செயலாளர் தி.நட ராசன், இணைச் செயலா ளர் டி.எம்.சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி கொடிக் கம்பத்தை வெட்டிச் சாய்த்தவர் மீது வழக்கு

கரூர், அக்.25 - கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், சுக்காம்பட்டி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் பேருந்து நிலையம் அருகில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.  23.10.2024 அன்று காலை வேறாரு கட்சியின் பிளக்ஸ் பேனர் வைப்பதில் ஊர்க்காரர்களுக்கும், சம்பந்தப்பட்ட கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு நின்றிருந்த மங்காம்பட்டியைச் சேர்ந்த நல்லுசாமி என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிக் கம்பம் மட்டும் எப்படி இங்கு இருக்கலாம் என்று கூறியபடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டிச் சாய்த்து உள்ளார்.  இச்சம்பவம் காவல்துறை கண் முன்பே நடந்துள்ளது. இதனை கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் ஒன்றியச் செயலாளர் எ.சுப்பிரமணியன் உடனடியாக தோகைமலை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல், சுக்காம்பட்டி கிளை செயலாளர் காளிமுத்து, காவல்காரன்பட்டி கிளை செயலாளர் அய்யர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜெயராமன், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் துறையை தனியார்மயமாக்க கூடாது!: பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.25- மின்சாரத் துறையை தனியார்மயமாக்க கூடாது என ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அமைப்பின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாநில மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். உற்பத்தியையும், விநியோகத்தையும் அம்பானி, அதானியிடம் அடகு வைக்க கூடாது.  இந்திய மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க கூடாது. 60,000 காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும்.  ஒன்றிய அரசை காரணம் காட்டி மின்வாரியத்தை தமிழக அரசு தனியார் மயமாக்க கூடாது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை பல கூறுகளாக பிரித்திட போடப்பட்ட அரசாணை எண்.6, 7 மற்றும் 32-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் மற்றும் சதீஷ், தர்மராஜ், செந்தில், கலைச் செல்வன், பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறுவள மைய அளவில்  கலைத் திருவிழா போட்டிகள்

அறந்தாங்கி, அக்.25 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளி அம்பலவானநேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய ஆறு குறுவள மையங்களில், குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டியினை அந்தந்த குறுவள மைய தலைமையாசிரியர்கள் தொடங்கி வைத்தனர். போட்டியில், ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 3 மூன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை இரண்டாவது பிரிவாகவும் கலைத் திருவிழா அனைத்து குறுவள மையங்களில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வண்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல், தேசபக்தி பாடல்கள், களிமண் பொம்மைகள் செய்தல், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கதை சொல்லுதல், பாடல்கள் பாடுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  வட்டாரக் கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் அமுதா வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆறு குறுவள மைய தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.