புதுக்கோட்டை, ஜன.23 - புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைந்து செவ் வாயன்று தொழில்நெறி வழிகாட் டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத் தினை நடத்தியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, அரங்குகளை பார்வை யிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வேலை வாய்ப்பு தகவல் கையேட்டினை வெளியிட்டார்.