பாபநாசம், மார்ச் 30 - தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சிகளின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத் திறப்பு விழா வெள்ளியன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. விழாவிற்கு காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி., ராமலிங்கம், மாநிலங்களவை எம்.பி., சண்முகம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார், தொகுதி பொறுப்பாளர் அய்யாராசு உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் சுதா பேசுகையில், “இந்தத் தேர்தல் இந்தியத் தாயை காப்பாற்றுவதற்கான தேர்தல். தொகுதிக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர முயற்சி எடுப்பேன். உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்” என்றார்.