districts

img

தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்க!

சிஐடியு வலியுறுத்தல் புதுக்கோட்டை, அக்.8- மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார்  மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக  அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சம்மேள னம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்  சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்  தலைவர் டி.முனியசாமி தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் கே.ஆர்.கணே சன், பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்து பேசினர். முன்னதாக மாநில நிர்வாகி கே.ரங்கராஜ் வரவேற்க, மாவட்ட பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா நன்றி கூறி னார். மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார்  மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக  அரசு திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அரசாணை எண்.2(4)62 (நாள்.11.10.2017)-ன்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.725-ம்,  நகராட்சி ஊழியர்களுக்கு ரூ.610-ம், பேரூ ராட்சி ஊழியர்களுக்கு ரூ.533-ம் தினக்கூலி யாக வழங்க வேண்டும். ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.11,848-ம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  இயக்குநர்களுக்கு ரூ.13,848-ம் மாத ஊதிய மாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு  முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.