districts

உதகை, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறையை ரத்து செய்க!

பாபநாசம், ஏப்.30 - உதகை, கொடைக்கானல் செல்லும் வாக னங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் செல்வது உதகை மற்றும் கொடைக்கானலில் வசிக்கும் மலை வாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக் கையாக உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் அங்கு  செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இத் திட்டம், இப்போது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்களுக்கு  மிகப்பெரும் நெருக்கடி ஏற்படும். இதனால்  உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பு களைச் சந்திப்பர். அது அவர்களுக்குப்  பேரி ழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள், மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். எனவே இதுகுறித்து தமிழக  அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து, இந்தப் புதிய கட்டுப்பாட்டி னை ரத்து செய்ய வேண்டும்.  இவ்விரு மலை தலங்களுக்கும் செல்லும்  வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.