கும்பகோணம், ஜூலை 22 -
திருச்சி மாவட்டம் உறையூர், கீழப்புது பாய்க்கார தெரு ராஜேஷ் கண்ணா, மன்னார்குடி, திருக்களார், கடுவக்குடி மெயின் ரோடு நரேந்தர் (32) ஆகிய இரு வரும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில், திருச்சி ஐஸ்வர் யம் சிட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தியுள்ளனர். இதன் இயக்குநராக ராஜேஷ் கண்ணா இருந்துள்ளார். இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி, தினசரி மற்றும் மாதாந்திர சீட்டு பணம் வசூல் செய் துள்ளனர்.
வைப்புநிதி மூலம் பணம் பெற்று, மேற்படி பணம் கட்டிய நபர்களுக்கு, உரிய பணத்தை திருப்பி தராமல் நிதி நிறுவ னத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து ராஜேஷ் கண்ணா மற்றும் நரேந்தர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு புலன் விசார ணையில் உள்ளது. கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சி.நாகலட்சுமி தலைமை யில், தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை மேற்கொள் ளப்படுகிறது.
மேலும், மோசடியில் ஈடுபட்ட வர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றப்பட்டவர்கள், எவரேனும் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப் படாமல் இருந்தால் மேற்படி நபர்கள் கும்ப கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சி.நாகலட்சுமியை (செல்: 9498162676, 9498162617) தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.