மயிலாடுதுறை, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 110 ஏக்கருக்கும் மேல் 15 லட்சம் செங்கரும் புகள் (பொங்கல் கரும்பு) சாகுபடி செய்யப் பட்டுள்ளன. குத்தாலம் ஒன்றியம், மல்லி யம் அருகேயுள்ள வானாதிராஜபுரம் கிரா மத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 லட்சத்துக்கும் மேல் செங்கரும்புகளை பயி ரிட்டு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புகள் எல்லாம் 6 அடிக்கு மேலும்,7 அடியை தாண்டியும் நீள மாக வளர்ந்துள்ள நிலையில், ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் அளவீடு செய்யாம லேயே 5 அடி தான் இருக்கிறது என அலட்சி யமாக கூறி புறக்கணிக்கின்றனர். மேலும், தலா 500 கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்து கொள்வதாக கூறுவதை கண்டித் தும் சனிக்கிழமை குத்தாலம் ஒன்றியம் மல்லி யம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சி.மேகநாதன், சிபிஎம் மயிலாடு துறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செங்கரும்பு களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய்த் துறை, வேளாண்மை, கூட்டுறவுத்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றுவதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.