கரூர், நவ.13 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்டக் கிளை 3-இன் முதலாவது வட்ட மாநாடு சங்க அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் ஆர்.பிரேம்குமார் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஏ.பி.சுப்பிரமணி யன், பொருளாளர் பெரியசாமி ஆகி யோர் அறிக்கை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். வட்டத் தலைவர் ஆர்.பிரேம் குமார், வட்டச் செயலாளர் சுப்பிரமணி யன், வட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிவ சண்முகம், வட்ட தணிக்கையாளர் வினோத் ஆகியோர் புதிய நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக சிற்றுண்டி மற்றும் தேநீர் நிலை யம் அமைக்க வேண்டும். கரூர் மாநக ராட்சி பகுதியில் பணிபுரியும் அரசு ஊழி யர்களுக்கு, மாநகராட்சிக்கு உரிய வீட்டு வாடகைப்படி மற்றும் மாநகர ஈட்டுப் படியினை வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளி கள், பொதுமக்கள் மற்றும் பணியா ளர்களின் நலனுக்காக மருத்துவக் கல்லூரி அருகே அனைத்து பேருந்து களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.