தஞ்சாவூர், ஜூலை 27- மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாட்டு வண்டியில் மணல் எடுத்து பிழைப்பு நடத்திட, தஞ்சாவூர் மாவட்டம் முள்ளங்குடி, நடுப் படுகை, மருவூர், திருச்சென்னம்பூண்டி மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள், தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவல கம் முன்பு வெள்ளிக்கிழமை காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா முள்ளங்குடியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மாட்டு வண்டிக் கான மணல் குவாரி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக திறக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் எடுக்க உறுதி யளித்தபடி, கொள்ளிடம் ஆற்றில் நடுப் படுகை, மருவூர், திருச்சென்னம்பூண்டி ஆகிய இடங்களில் காலம் கடத்தாமல் மணல் குவாரியை துவக்க வேண்டும். பாபநாசம் தாலுகா புத்தூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள மணலை மாட்டு வண்டி யில் எடுத்துச் சென்று பிழைப்பு நடத்திட உரிய அனுமதியை வழங்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் கட்டணத்தை ரூ.700-ல் இருந்து ரூ.250 ஆக குறைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். போராட்டத்தில் முறைசாரா தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் திருவிடைமருதூர் எம்.கோவிந்தராஜ், பாப நாசம் கரிகாலன், சுதாகர், பூதலூர் ரமேஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட நூற்றுக்கணக் கான மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், “அரசின் உத்த ரவு பெற்று மணல் குவாரியை திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார். அப்போது நீர்வள ஆதாரத்துறை எஸ்.டி.ஓ முருகையன், ராஜா மற்றும் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.