districts

img

விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

ஒன்றிய மோடி அரசாங்கத்தின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மருவளம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்வேறு மையங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன்  செயலாளர் வாசுதேவன் பொருளாளர் விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.