districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்குக!

 திருநெல்வேலி, ஜன .21- பாளையங்கோட்டை தியாக ராஜ நகரில் அகில இந்திய பிஎஸ் எல் ஓய்வு பெற்ற சங்கத்தின் ஐந்தா வது நெல்லை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலை வர் கனகமணி தலைமை தாங்கி னார், மாவட்ட செயலாளர்  முத்து சாமி வரவேற்று பேசினார் ,மாநில செயலாளர் ராஜசேகர் மாநாட்டை தொடங்கி வைத்து  பேசினார், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலாளர் பொன்னையா ,ஓய்வூதியர் சங்க  அகில இந்திய உதவி பொருளா ளர் சீதாலட்சுமி, மாநிலத் துணைத் தலைவர் இந்திரா, உதவி தலை வர் பெருமாள் சாமி ஆகியோர்  பேசினர். மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார், பிஎஸ் என்எல் பொது  மேலாளர் வீராச் சாமி, ஓய்வூதியர்  சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா மணி, தூத்துக்குடி மாவட்ட செயலா ளர் ராமர், நாகர்கோவில் மாவட்ட செயலாளர் ஜார்ஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சூசைமரிய  அந்தோணி, தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் அழகு நாச்சியார் ஆகி யோர் வாழ்த்தி  பேசினர். மாநாட்டில் பிஎஸ்என்எல் ஒய்வூ தியர்களுக்கு 2017 க்கு பிறகு பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . ஓய்வூதியர்  சங்க மாவட்ட தலைவராக கனகமணி ,செயலா ளராக முத்துசாமி, பொருளாளராக சங்கரநாராயணன் மற்றும் ஐந்து துணைத் தலைவர்கள் ஐந்து துணைச் செயலாளர் உட்பட 19 கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது.