districts

பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க 7 ஆவது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவக்கம்

திருச்சி,டிச.18- அகில இந்திய பிஎஸ்என் எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 7 ஆவது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்குகிறது. இதுகுறித்து அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜசேகர்  வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

நாடு முழுவதும் 4 லட்சத் திற்கும் மேற்பட்ட பிஎஸ்என் எல் - டிஓடி (BSNL-DOT) ஓய் வூதியர்கள் கடந்த 8 ஆண்டு காலமாக தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் ஓய்வூ திய மாற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

1.1.2017 முதல் 15 சதவீத ஃபிட்மெண்ட் பலனுடன் ஐடிஏ(IDA) விகிதத்தில், ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல் பென்சன் மாற்றம் வேண்டும் என்பதே பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூ தியர்களின் கோரிக்கை. அரசு, பிஎஸ்என்எல் ஊழி யர்களுக்கு, மத்திய பொதுத் துறை ஊழியர்களுக்கான 3 ஆவது ஊதிய கமிட்டி யின் அடிப்படையில் 1.1.2017  முதல் ஊதிய மாற்றத்தை யும் மறுத்து வருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படுகிறது என்பதே அவர்கள் காரணம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருமானம் குறைந்ததற்கு காரணம் ஊழியர்கள் அல்ல, மாறாக 4ஜி/5ஜி சேவைகளை தருவதற்கு பிஎஸ்என்எல்-க்கு முட்டுக் கட்டை போடும் ஒன்றிய அரசின் கொள்கைகளே கார ணம்.

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற அரசின் ஆதரவு  பெற்ற தனியார் நிறுவனங் களுக்கு வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உபகர ணங்களை இறக்குமதி செய்து, பயன்படுத்து வதற்கு அனுமதி வழங்கிய அரசு, பிஎஸ்என்எல்க்கு மட்டும் உள்நாட்டில் உற் பத்தியான உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை சாத்தியமற்ற நிபந்தனையை விதித்து பிஎஸ்என்எல்  சேவை வளர் ச்சியை முடக்கியுள்ளது.

ஊதிய மாற்றம் அமலா காமல் ஓய்வூதிய மாற்றம் சாத்தியமல்ல என்று அரசும், நிர்வாகமும் போலி யான காரணங்களை கூறி வருகின்றனர். ஏனெனில் பென்சன் கொடுப்பதற்கான செலவை 60:40 விகிதாச்சார அடிப்ப டையில் டிஓடி-யும் பிஎஸ் என்எல்லும் பிரித்துக் கொள்வது என்ற விதி ரத்து செய்யப்பட்டு பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர்களுக்கு பென்சன் கொடுக்கும் முழு  பொறுப்பும், செலவையும் டிஓடி ஏற்றுக் கொண்டுள்ள தால், ஐடிஏ-வில் பென்சன் பெற, பிஎஸ்என்எல் நிதி  நிலை, ஊதிய மாற்றத்து டன் பென்சன் மாற்றம் எந்த விதத்திலும் தொடர்புப் படுத்த வேண்டியதில்லை என்பதே அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதி யர் சங்கத்தின் (AIBDPA) உறுதியான நிலைபாடு ஆகும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.