districts

img

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பிஎஸ்-4 புதிய பேருந்து இயக்கம்

கும்பகோணம், ஜன.24 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் களின் சார்பில், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், ரூ.634.99 கோடி மதிப்பீட்டில், புதிதாக 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 100 BS-VI  பேருந்துகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற் காக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மத்திய  பணிமனையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத் தின் சார்பாக, கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில், கும்பகோணம் முதல்  மயிலாடுதுறை வரை சென்றுவரும் BS-VI  புதிய பேருந்தினை, கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழ கன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி  துணை மேயர் சு.ப.தமிழழகன், மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.அனந்தராமன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.