districts

img

சுமைப் பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.6 - சம்பள உயர்வு கோரி வேஸ்ட் பேப்பர் சுமைப் பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளக்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 1.9.2023 முதல் சம்பள உயர்வு கேட்டு வேஸ்ட் பேப்பர் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் உரிமை யாளர்களிடம் கோரிக்கை மனு கொடுக் கப்பட்டது. ஆனால் இதுவரை கூலி  உயர்வு குறித்து எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தாததை கண்டித்து  வேஸ்ட் பேப்பர் சுமைப்பணி தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த வேலை நிறுத்த போராட் டத்தை விளக்கி, வேஸ்ட் பேப்பர் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் (சிஐ டியு) சார்பில் புதனன்று திருச்சி தாரா நல்லூர் கீரைக்கடை பகுதியில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுமைப்பணி சங்க தலைவர் பாண்டித்துரை தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை ஆகி யோர் பேசினர்.