மயிலாடுதுறை, ஏப்.15- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்எ திருக்களாச்சேரியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று நடை பெற்றது. இதில் மும்மதங்களை சேர்ந்தவர் கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முரு கன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள், கிறித்தவர் கள், இந்துக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞான வேலன், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழ கன், அமுர்த விஜயகுமார், தரங்கம்பாடி கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை அரு ளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.