districts

img

காலை உணவு தயாரிப்பு ஒத்திகை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், ஆக.21-  

      தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு  திட்ட உணவு தயாரிப்பு ஒத்திகையினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் திங்கள் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     தமிழ்நாடு முதலமைச்சர் ஆக.25 அன்று  காலை உணவு திட்டப் பணிகளை துவங்க  உள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப், தஞ்சாவூர் ஒன்றியம், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சத்துணவு கூடத்தில், காலை உணவுத் திட்ட தயாரிப்பு ஒத்திகையினை பார்வையிட்டு, உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

     ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசு,  மகளிர் திட்ட இயக்குநர் சாந்தி, தஞ்சாவூர் வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலு வலர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

பாபநாசம்

      மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி யில், கொத்தங்குடி, வெண்ணுக்குடி, எடக்குடி, உதாரமங்கலம் உள்ளிட்ட கிராமங் களில் இயங்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மாதிரி செயல்பாடாக,  சமைத்த உணவுகளை, ஊராட்சி மன்றத்  தலைவர் பழனி ஆய்வு செய்து, சுவைத்துப்  பார்த்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பி னர்கள், சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.