திருச்சிராப்பள்ளி, ஜூலை 30-
திருவாரூரில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம், திருச்சிராப்பள்ளியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது.
இது குறித்து திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “கடந்த ஜூலை 25-ஆம் தேதி திருவாரூ ரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இருந்து மூளைச் சாவு அடைந்தவரின் சிறுநீரகம் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் ஹீமோடை யாலிசிஸ் செய்து கொண்டிருந்த 43 வயது பெண்ணுக்கு மாற்றப்பட்டது. திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை யில் நடைபெற்ற 17-ஆவது சிறுநீரக மாற்று அறுவை யாகும் இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.