districts

போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள புத்தகங்களே ஆயுதம்

மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசியதாவது:  இளைஞர் சமுதாயத்தை அறி வார்ந்த சமுதாயமாக மாற்றுவ தற்காக இதுபோன்ற புத்தகத் திரு விழாவை தமிழக அரசு நடத்தி வரு கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞ ரின் முயற்சியினால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத  அளவுக்கு தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது. மருத்துவம், வேளாண்மை, கலை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அதிக எண் ணிக்கையிலான கல்லூரிகளை தொடங்கியுள்ளதால் 51 விழுக்காடு உயர்கல்வி பெற்ற மாநிலமாக தமிழ் நாடு உயர்ந்து நிற்கிறது. பாடங்களோடு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தையும் மாண வர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தேவையான ஏராளமான புத்தகங்கள் இப்புத்தகத் திருவிழா அரங்குகளில் கிடைக்கின்றன. அவற்றை இளைய சமூதாயம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தில் 81  விழுக்காடு பெற்று, நாட்டில் 2 ஆவது மாநிலமாக தமிழகம் விளங்கு கிறது. இதன் தேசிய அளவிலான  சராசரி 67 சதவீதம். பசுமையான  சூழல் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை யும், புத்துணர்ச்சியையும் அளிப்ப தைப்போல படிக்கும் புத்தகங்களும் அளிக்கும். ஒவ்வொரு மனிதனும் புத்தகங்களையும், மரங்களையும் நேசிக்க வேண்டும்.

புத்தகங்கள் வாசிப்பதை ஒரு போதும் நிறுத்தாதீர்கள். நிறைய வாசிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஒருவரி தான் வாசிக்க முடியுமென்றால் ஆத்திசூடியை வாசிக்கலாம். 2 வரிதான் வாசிக்க முடியுமென்றால் திருக்குறளை வாசிக்கலாம். 3 வரியை வாசிக்க முடியுமென்றால் ஹைக்கூவையும், 4 வரிதான் முடியு மென்றால் நாலடியாரையும் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஏற்ப வரி கள் உண்டு. எனவே, வாசிக்கத் தவ றாதீர்கள்.

போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு,  அதை எதிர்கொள்ளும் சிறந்த ஆயு தம் புத்தகங்களே!. புகழோடும்,  பெருமையோடும், சமூகத்தில் உயர்ந்து விளங்க வேண்டுமென் றால் புத்தகங்களை வாசிக்க வேண் டும். புத்தகங்களை வாசிக்காமல் அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதிக நேரம் செல்போன் பயன் படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். செல்போனை அதிகம்  பயன்படுத்தினால் எதிர்விளைவு களை ஏற்படுத்தும். பதவி, பொருள், புகழை யார் வேண்டுமானும் பறித் துச் சென்றுவிடலாம். ஒருபோதும் அறிவை யாராலும் பறிக்க முடியாது.  அந்த அறிவைத் தரக்கூடிய புத்த கங்களை வாசிப்போம். 10 நாட்களும்  நடைபெறும் புத்தக விழாக்களை கொண்டாடுவோம்.  இவ்வாறு அமைச்சர் மெய்ய நாதன் பேசினார்.