districts

img

ஜன.31 முதல் பிப்.10 வரை மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை, ஜன.25 - மயிலாடுதுறையில் ஜனவரி 31 முதல்  பிப்ரவரி 10 வரை 3 ஆவது புத்தகத் திரு விழா நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழா வையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி இலச்சினையை வெளியிட்டு உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடு துறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3 ஆவது புத்தகத் திருவிழா ஜன.31 முதல் பிப்.10 ஆம் தேதி வரை மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல்  இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின்  முன்னணி பதிப்பகங்களின் 70 புத்தக விற்பனை அரங்குகள், அரசு துறைகளின் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், அறிவியல் கோளரங்கம் இடம்பெற உள்ளது. இப்புத்தகத் திருவிழா வில் புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், கிராமிய கலைக் குழுவினர்களின் நாட்டுப் புற கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் இப்புத்தகத் திரு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. திரு விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமா மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் கீதா, மயிலாடுதுறை வரு வாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.