தூத்துக்குடி, மே 13-
தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனி பர் (51). இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் ஜெனிபர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (62), எக்லிண்டன் (61), ஆரோக்கியம் (40) ஆகிய நான்கு பேரும் மே 11- ஆம் தேதி தங்கு கடல் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். வெள் ளிக்கிழமை காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். வெகு நேரம் ஆகியும் படகு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கீழ வைப்பார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல் குழுமத்தி னருக்கும், மீனவர் நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து படகு மூலம் கடலில் தேடினர். சுமார் 25 நாட்டிகள் மைல் தூரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடுக்கடலில் உயி ருக்குப் போராடி தத்தளித்து கொண்டிருந்த நான்கு மீனவர்களை மீட்டு வந்தனர்.