விருதுநகர், ஏப்.,27- விருதுநகர் மக்களவைத் தொகு தியில் பூத் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை பாஜக நிர்வாகி கள் தொண்டர்களுக்கு வழங்கா மல் ஆட்டையபோட்டு விட்டதாக புகைப் படத்துடன் திருமங்கலம் பகுதியில் அதே கட்சியைச் சேர்ந்த வர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனது சொந்த கட் சிக்கு மூடு விழா நடத்தி விட்டு பாஜகவில் இணைத்த நடிகர் சரத் குமாரின் மனைவியான நடிகை ராதி காவிற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே, வேட்பா ளர் கனவில் இருந்த பல பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்பு, வேறு வழி யின்றி ஏனோதானோவென்று தேர் தல் பணிகளில் ஈடுபட்டனர் என பாஜகவை சேர்ந்தவர்களே பலர் தெரிவித்தனர். நடிகை ராதிகாவோ, வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் கொள்கைகள், வாக்குறுதிகள் எதையும் கூறாமல், சினிமா விஷயங்களை மட்டுமே பேசி வந்தார். இதனால், பொது மக் கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 19 அன்று தேர்தல் முடிந்தது. இந்தநிலையில், திருமங்கலம் பகுதியில் பாஜகவைச் சேர்ந்தவர் களே ஒரு போஸ்டரை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் பாஜக மாவட்ட நிர்வாகி கள், தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் பூத் செலவுக் கான பணத்தை ஆட்டையபோட்டு விட்டார்கள் என பகிரங்கமாக 4 பேரின் புகைப்படங்களுடன் போஸ் டரை ஊர் முழுவதும் ஒட்டி விட்டனர். இதை செல்போனில் படம் எடுத்த உள்ளூர்வாசிகளோ, மாநி லம் முழுவதும் அந்த சுவரொட்டி யை பரப்பி விட்டனர். தற்போது அந்த சுவரொட்டி வைரலாகி வரு கிறது. அந்த போஸ்டரில் உள்ள விருது நகர் மக்களவைத் தொகுதி பொறுப் பாளர் வெற்றிவேல் என்பவர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது ஏராள மான வழக்குகள் உள்ளன. இவர், முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதி மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி வழியாகத்தான் விநாயகர் சிலைகளை மேளதா ளத்துடன் செல்வோம் எனக் கூறி பிரச்சனை செய்தவர் ஆவார். இத னால், காவல்துறை தடியடி நடத்தி அங்கு பாஜகவினரை விரட்டி பின்பு வழக்கு பதிவு செய்யும் நிலை ஏற் பட்டது. ஏராளமான வழக்குகள் உள்ள தால், இவரது உயிருக்கு பாதுகாப் பாக துப்பாக்கியுடன் காவலர் ஒரு வர் எப்போதும் உடன் உள்ளா ராம். மேலும் அந்த போஸ்டரில், மதுரை மேற்கு மாவட்டத் தலை வர், மாவட்ட செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோ ரின் புகைப்படங்களும் உள்ளன. இந்த போஸ்டரால் பாஜகவின் லட்சணம் சந்தி சிரிக்கிறது என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்ற னர்.