மதுரை, மார்ச் 25- மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் திங்க ளன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் தனது கூட்டணியாளர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைமையில் அரசியலில் அதிசயம் நிகழப்போகிறது. மோடி அலை மதுரையில் வீசுவதாக கூறினார். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் திரட்டிய நிதியை தேர்தலுக்குப் பயன்படுத்துமா எனக் கேட்டதற்கு, ‘‘இப்பிரச்சனை நீதி மன்றத்தில் உள்ளது நீதிமன்ற வழிகாட்டு தலுடன் செயல்படுவோம்’’ என்றார். ஒத்தி சைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசுப் பட்டியலுக்கு கொண்டு வருவீர்களா எனக் கேட்டதற்கு ‘பார்ப்போம்’ என்றார். பாஜகவைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் பி.சரவணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவ ரும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். முன்னதாக காந்தி அருங்காட்சியகம் அருகில் இருந்து பேரணியாக வேட்புமனு தாக்கலுக்கு வந்த பாஜகவினர், தாங்கள் அனைவரையும் வேட்பாளருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல்துறையினர் வேட்பாளருடன் 5 பேர் தான் செல்ல வேண்டும் என்று கூறி வேட்பாளருடன் சேர்த்து 5 பேரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய காவல்துறையினர் அனுப்பினர்.