districts

img

தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல்

தஞ்சாவூர், மார்ச் 15-  தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால், மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த முன்னாள் எம்பி யும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே செங்கிப் பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த  பீட்டர் அல்போன்ஸ் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: புதிதாக தேர்தல் ஆணையர்  நியமிக்கப்பட்டதில், எந்த வழி காட்டுதலும் பின்பற்றப்பட வில்லை. முதலில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழு வில் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இருந்து தேர்தல் ஆணையர்களை தேர்ந் தெடுப்பது என்பது எந்தவிதமான நியாய, தர்மத்துக்கும் உட்படாத ஒரு ஏற்பாடு. முறையான தகவல் இல்லை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான வழக்கு  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்ற உடனேயே, வியா ழக்கிழமை அவசர அவசரமாக அந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். அதிலும், காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்றத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஆதி ரஞ்சன் சவுத்ரிக்கு முறையான  தகவல்கள் கொடுக்கப்படவில்லை.  யாருடைய பெயர்கள் எல்லாம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது, அவர்களுடைய தகுதிகள் என்ன இதுபோன்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. கூட்டம்  நடப்பதற்கு 10 மணி நேரத்துக்கு  முன்பு, சில பெயர்களை கொடுத்துவிட்டு அவர்களை கூட்டத் துக்கு அழைத்துள்ளனர். அவர் களால் கூட்டத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. வழிப்பறி கொள்ளை போல்... இந்தச் சூழலில் வெள்ளியன்று தேர்தல் பத்திர நன்கொடை தக வல்கள் வந்துள்ளன. சுதந்திர இந்தி யாவில் இதுவரை இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற தில்லை. அரசாங்கமே ஒரு வழிப் பறி கொள்ளையில் ஈடுபட்டதை போல, மிகப்பெரிய தொழில் அதி பர்களை மிரட்டி, அவர்களது வீடு களில் வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறைகளை ஏவி விட்டு அவர்களது வீடுகளில் சோதனை செய்து, அவர்கள் கைது  செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர்களது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதே நேரத்தில், அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை வசூலித்திருப்பது ஒரு வழிப்பறி  கொள்ளையை விட மோசம். மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் அப்படிப்பட்ட மோசமான செய லில் ஒன்றிய பாஜக அரசு ஈடு பட்டுள்ளது என்பது வருத்தமான செய்தி, கண்டிக்கத்தக்கதும் கூட.  இதற்கு பொறுப்பேற்று மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் முறையான செயல். கடந்த காலங்களில் மிக சாதா ரணமான செயல்களில் எல்லாம் மன்மோகன்சிங் அரசை ராஜினாமா  செய்ய வேண்டும் என பாஜக வினர் கேட்டார்கள். இப்போது, சுதந்திர இந்தியா வரலாற்றில் இல்லாத இவ்வளவு பெரிய கொடுமை நடந்துள்ளது. விலைக்குறைப்பு தேர்தல் வரும்போது எல்லாம்  பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்பது பாஜகவுக்கு வாடிக்கையான ஒன்று. இந்த  தேர்தல் பத்திரங்கள் குறித்த செய்திகள் தலைப்புச் செய்தி களாக வருவதால், அந்த தலைப் புச் செய்தியை திருடிக் கொள்ளவே பெட்ரோல், டீசல் விலை  ரூ.2 குறைப்பு என அறிவித்துள்ள னர்.  அந்த 2 ரூபாய் குறைப்பு என்பது  தலைப்பு செய்தியாக வந்தால், தேர்தல் பத்திரங்களைப் பற்றிய செய்திகள் சிறிய செய்திகளாகி விடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பு க்கு மீறி, தலைப்புச் செய்தி களாக வந்துள்ளது. தேர்தல் வரும் போது பெட்ரோல் விலையை குறைப்பதும், தேர்தல் முடிந்ததும் விலையை கூட்டுவதும் பாஜக வுக்கு கைவந்த கலை. பிற மாநிலங்களில் பாஜகவுக்கு  எதிராக நிற்கும் கட்சிகள் வெற்றி  பெற்றால், அந்த வெற்றி இண்டியா  கூட்டணிக்கான வெற்றியாகதான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.