காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.