தஞ்சாவூர், பிப்.10- மனிதர்களின் நலவாழ்வை உறுதிப் படுத்துவோம் என்னும் நோக்கத்தில் உலக அளவில் கொண்டாடப்பட்டு வரும், உலக ஈர நில தினத்தையொட்டி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி யில், அறிவியல் கழகம் மற்றும் வனத்துறை யின் சார்பில் பறவைகள் நிழற்படக் கண்காட்சி நடைபெற்றது. பறவைகள் படக் கண்காட்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் திறந்து வைத்தார். துறைத் தலைவர் முனைவர் சந்திர கலா, முனைவர் தங்கமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னாள் வன அலுவலர் செல்வம், வனத்துறை சரக அலுவலர் ரஞ்சித், வனச் சரகர் தி.இளஞ்செழி யன், ஈவெட் ட்ரஸ்ட் சதீஷ், ஜாஃபர், சத்யா, கல்லூரி ஆசிரியர் கழக செயலாளர் பேரா சிரியர் பெரியநாயகி ஆகியோர் கண் காட்சியை பார்வையிட்டு பாராட்டினர். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுகுமாரன், கல்லூரி பேராசிரி யர்கள் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டினர். இந்த நிழற்பட கண்காட்சியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.