districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கரூரில் இருசக்கர வாகனப் பேரணி

கரூர், டிச.25 - மக்கள் விரோத ஒன்றிய பாஜக  அரசைக் கண்டித்து கரூரில் இரு சக்கர வாகனப் பேரணி நடை பெற்றது. தொழிலாளர், விவசாயிகள்  மற்றும் மக்கள் விரோத கொள் கைகளை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித் தும், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர்  திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய-மாநில தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கரூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.  கரூர் காந்திகிராமம் பேருந்து  நிறுத்தத்தில் துவங்கி, வெங்க மேடு கடைவீதியில் இப்பேரணி நிறைவடைந்தது. கரூர் நாடாளு மன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து பேசினார்.   தொடர்ந்து நடைபெற்ற தெரு முனை கூட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணா வேலு தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பழ.அப்ப சாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலை வர் கே.பழனிச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.  வடிவேலன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகி யோர் பேசினர். இப்பேரணியில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.