புதுக்கோட்டை, ஜூன் 27-
ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வரும் வீட்டுக்கு ஒன்றிய பாஜக அமைச்சர் புதிதாக பூமி பூஜை நடத்திய சம்பவம் தற்பொழுது வெளிச்சத் துக்கு வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சேதுராப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஒச்சம்பட்டி கிராமம். இங்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பிர தமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சாலைப் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்ட னர்.
இந்நிலையில், அது போலியான நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சியரிடம் சேதூ ராப்பட்டி ஊராட்சி முதலாவதுது வார்டு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருமான மா.முருகா னந்தம் புகார் அளித்துள்ளார். அந்த மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம்:
புதுக்கோட்டை மாவட்டம் சேதுராப் பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஐந்து பேருக்கும், 2022-ஆம் ஆண்டில் ஒரு வருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், இருவர் வீடு கட்டி முடித்துவிட்டனர். மூன்று பேர் பணியைத் தொடங்கவில்லை. முத்துக்கருப்பன் மனைவி கருப்பாயி என்பவரின் பெயரில் வழங்கப்பட்ட பணி ஆணையின்படி வேலை நடைபெற்று வருகிறது. இரு முறை அரசு நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசியல் ஆதா யத்துக்காக, உள்நோக்கத்துடன் அவரது வீட்டுக்கு பூமி பூஜை போட்டுள்ளனர். போலி யாக வீடு கட்டுவதற்கான ஆணை ஒன்றை யும் நிகழ்ச்சியின்போது பயனாளி கருப் பாயியிடம் வழங்கியுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலருக்கோ, ஊராட்சி மன் றத்துக்கோ எந்தத் தகவலும் அளிக்க வில்லை.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் மாநில அரசை அவமானம் செய்யும்வித மாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.