districts

img

ஜேஇஇ மெயின் தேர்வு பரணி வித்யாலயா மாணவர்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

கரூர், மார்ச் 16 - ஜே.இ.இ(JEE) மெயின் தேர்வில் 99.9 சதவீதம் பெற்று கரூர் பரணி வித்யாலயா மாணவர் தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார். நடப்பாண்டில் நடைபெற்ற ஜே.இ.இ மெயின் தேர்வில் கரூர் பரணி வித்யாலயா மாணவர் ஹரிஷ்குமார் 99.9 சதவீதம் பெற்று  தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஹரிஸ்குமார் மற்றும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவர்களுக்கு பரணி வித்யாலயா பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது.  ஜே.இ.இ. 2024 மெயின் தேர்வின் முதல்  தாளில் ஹரிஸ்குமார் (99.9 சதவீதம்), அக்சயா (98.3 சதவீதம்), ராகுல் (98.01 சதவீதம்) ஆகியோர் தேசிய அளவில் சிறப்பிடம்  பெற்றனர். மேலும்  ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் தாளில் சிறப்பிடம் பெற்ற  குமரன் எழில்ராம் (95.3 சதவீதம்),  வித்ய வர்ஷினி (93.4 சதவீதம்), சர்வேஷ் (92.7 சதவீதம்), தீபக் (91.9 பெர்சண்டைல்), ரிதன்யா  (91.9 சதவீதம்), சுனேஷ் கிருஷ்ணா (91.8 சத வீதம்) மற்றும் ஜே.இ.இ. மெயின் தேர்வின்  இரண்டாம் தாளில் சிறப்பிடம் பெற்ற துருதிஷ் கிருஷ்ணா (94.7 சதவீதம்) ஆகி யோரை வாழ்த்தி, பரிசுகள் வழங்கி பாராட்டி னர்.  விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழும  தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை  வகித்தார். செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் சுபாஷினி, முதன்மை  முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பரணி வித்யாலயா பள்ளியில் நீட், ஜே.இ.இ  குரோத் அகாடமி பயிற்சி மையத்துடன் இணைந்து அனுபவம் வாய்ந்த ஆந்திரா  மாநில ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.