districts

img

பகத்சிங் நினைவுதின இரத்ததான முகாம்: 68-ஆவது முறையாக பங்கேற்ற கனல் கண்ணன்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 26- பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்ததானக் கழகம் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை இரத்த வங்கியோடு இணைந்து ஞாயிறன்று  அரியமங்கலத்தில்  இரத்ததான முகாம் நடத்தியது. முகாமிற்கு மாவட்டத் தலைவர் பா.லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதி வரவேற்றார். மண்டலம்-3 ன் மாநகராட்சி கோட்டத் தலைவர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலா ளர்  ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி செல்வம், ரேணுகா,  மாமன்ற உறுப்பினர் சுரேஷ், திமுக வட்டச்  செயலாளர்கள் விஸ்வநாதன், தவசீலன், கவுன்சிலர் தாஜூதீன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், வாலிபர்  சங்க நிர்வாகிகள் சந்துரு, நிவேதா, சந்தோஸ், தௌபிக், துளசி, நூர் முகமது, முகேஷ், மகேஷ், லோகு ஆகியோர் பங்கேற்றனர்.  முகாமில் கனல் கண்ணன் 68-  ஆவது முறையாக இரத்த தானம்செய்தார். திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தங்களை பரிசோதித்து சேகரித்தனர். இரத்த வங்கி மருந்தாளுனர் பாலசந்தர் ஒருங்கிணைத்தார்.  மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.