மயிலாடுதுறை, ஆக.16 -
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் சுதந்திர தின விழாவை யொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற்றன. கூட்டத்தில் தரங்கம்பாடி ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்கிடக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கிய ரயில் போக்குவரத்தை, 1986 இல் அகல ரயில் பாதையாக மாற்றுவதாக கூறி, ரயில்வே துறை திடீரென நிறுத்தியது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மீண்டும் ரயில் சேவைக்கான எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ரயில் சேவையை துவங்கி டக் கோரி சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அறைகூவல் விடுத்தது.
இதன்படி ஆக்கூர், திருக்கடையூர், டி. மணல்மேடு, எடுத்துக்கட்டி, இளையாளூர், கிடாரங்கொண்டான், பெரம்பூர், அன்னவா சல், கடலங்குடி, புளியந்துறை, சட்டநாத புரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்கிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.